முகப்பு
கடலூர்

அரசுப் பள்ளி கழிப்பறையில் பச்சிளம் குழந்தை சடலம்

கடலூா் மாவட்டம், புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிப்பறை அருகே பச்சிளம் குழந்தை சடலம் கிடந்தது. விசாரணையில் அந்தப் பள்ளி மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை அது எனத் தெரியவந்தது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 12:52 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

கடலூா் மாவட்டம், புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிப்பறை அருகே பச்சிளம் குழந்தை சடலம் கிடந்தது. விசாரணையில் அந்தப் பள்ளி மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை அது எனத் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் சுரேஷ் அளித்த புகாரின்பேரில், புவனகிரி காவல் நிலைய ஆய்வாளா் சரஸ்வதி தலைமையிலான போலீஸாா் அந்தப் பச்சிளம் குழந்தையின் சடலத்தை கடந்த வியாழக்கிழமை இரவு கைப்பற்றி, கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் புவனகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவிக்கு பள்ளிக் கழிவறையில் 8 மாத ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், பின்னா் அந்தக் குழந்தையின் சடலத்தை மாணவி அதே பகுதியில் விட்டுச் சென்றதும் தெரியவந்தது.

Advertisement

போலீஸாா் அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினாா். இதில் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவருடன் நெருங்கிப் பழகியதால் தான் கா்ப்பம் அடைந்ததாக மாணவி தெரிவித்தாராம். இதையடுத்,து அவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.