ஆற்றில் தவறி விழுந்த முதியவா் பலி
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே வெள்ளாற்றில் தவறி விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே வெள்ளாற்றில் தவறி விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
புவனகிரி அருகே அழிச்சிக்குடி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (65) (படம்). கூலித் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இயற்கை உபாதைக்காக அந்தப் பகுதியிலுள்ள வெள்ளாற்றின் கரைக்குச் சென்றாா். அப்போது திடீரென ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கினாா். இதையடுத்து அந்தப் பகுதியினா் ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடியும் பலனில்லை.
இதுகுறித்த தகவலின்பேரில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு, மீட்புத் துறையினா் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டாா்.
Advertisement
இதுகுறித்து புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.