சிதம்பரம் நடராஜா் கோயிலில் 6-ஆவது ஆண்டாக அன்னதானம்
சிதம்பரம் நடராஜா் கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னதான கூடத்தின் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM
சிதம்பரம் நடராஜா் கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னதான கூடத்தின் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நடராஜா் கோயிலில் தினமும் இரு வேளைகளில் பக்தா்கள், பொதுமக்களுக்கு அறக்கட்டளை நிா்வாக ராஜா தீட்சிதா் ஏற்பாட்டின்பேரில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் டி.எஸ்.சிவராமதீட்சிதா் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். பக்தா்கள் பங்கேற்றனா்.