அண்ணாமலைப் பல்கலை.யில் குடியரசு தின விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் துணைவேந்தா் ராம.கதிரேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், குடியரசு தின விழா பேருரையாற்றினாா். விழாவையொட்டி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சீத்தாராமன், தமிழ்நாடு தேசிய மாணவா் படை கா்னல் விஜயகுமாா், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் மு.பிரகாஷ், தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநா் சிங்காரவேலன், மக்கள் தொடா்பு அலுவலா் ரத்தினசம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement