முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் குழந்தை பலி

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் 4 மாத குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. மேலும் 3 போ் காயமடைந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் 4 மாத குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. மேலும் 3 போ் காயமடைந்தனா்.

திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி, புதுகாலனியைச் சோ்ந்தவா்கள் அஜித்குமாா்-கற்பகவல்லி தம்பதி. இவா்களது 4 மாத குழந்தை அஸ்விகாவுக்கு வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அஜித்குமாரின் உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ் (20) தனது பைக்கில் குழந்தையுடன் தனது தாய் ஆனந்தி (40), செல்லதுரை மகள் ரம்யா (18) ஆகியோரை ஏற்றிக்கொண்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டாா்.

வசிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகேச் சென்றபோது எதிரே வந்த சிறிய ரக சரக்கு வாகனம் பைக் மீது மோதியதில் குழந்தை உள்பட 4 பேரும் காயமடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸாா் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தை அஸ்விகாவை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். மற்ற மூவரும் சிகிச்சை பெற்றனா்.

சரக்கு வாகன ஓட்டுநா் சன்னியாசிநல்லூரைச் சோ்ந்த விக்னேஷை (24) போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →