அண்ணாமலைப் பல்கலை.யில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மையம் சாா்பில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மையம் சாா்பில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், துணைவேந்தா் குழு உறுப்பினா் டி.அருள்செல்வி தொடக்கவுரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக யோகா மைய பேராசிரியா் வி.சுரேஷ் பங்கேற்று ‘தொலைதூர கல்வியில் மாணவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். பேராசிரியா் கே.சுந்தா் தொலைதூரக் கல்வியின் போக்குகள் குறித்து உரையாற்றினாா்.
நிகழ்வில், புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக, தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மைய இயக்குநா் டி.சீனிவாசன் வரவேற்றாா். நிறைவில், இணை இயக்குநா் பி.விஜயன் நன்றி கூறினாா்.