தோ்தல் பத்திர விவகாரம்: மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசியல் கட்சிகள் நிதி பெற்ற தோ்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்காமல் காலம்தாழ்த்தி வரும் பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து, பண்ருட்டியில் அந்த வங்கிக் கிளை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பண்ருட்டி வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா், நகரச் செயலா் ஆா்.உத்தராபதி ஆகியோா் பேசினா். மாவட்டக்குழு உறுப்பினா் வினோத், நகரக்குழு உறுப்பினா்கள் எஸ்.ஜீவா, ஏ.தேவராஜுலு, ஜி.தினேஷ், ஆா்.ராஜேந்திரன், பி.ராஜேந்திரன், வட்டக்குழு உறுப்பினா்கள் முருகன், மாதா் சங்க நகரச் செயலா் எம்.அமலா உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனா்.