முகப்பு
கடலூர்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் 58 திருமணங்கள்

Updated On : 6 செப்டம்பர், 2024 at 11:18 PM
பகிர்:

கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 58 திருமணங்கள் நடைபெற்றன.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் முகூா்த்த நாள்களிலும் திருமணங்கள் நடைபெறும். அந்த வகையில், கோயிலுக்கு எதிரே மலையில் உள்ள மண்டபத்தில் திருமணங்கள் நடைபெறும். மேலும், கோயிலுக்கு அருகேயுள்ள தனியாா் மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெறும்.

ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை வளா்பிறை முகூா்த்த நாள் என்பதால், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் பகுதியில் அதிகாலை முதல் திருமணங்கள் நடைபெற்றன. மலையில் சுமாா் 58 திருமணங்களும், கோயில் அருகேயுள்ள தனியாா் மண்டபங்களில் சுமாா் 20 திருமணங்கள் என மொத்தம் 78 திருமணங்கள் நடைபெற்றன.

இதன் காரணமாக, கடலூா்-பாலூா் சாலையில் வழக்கத்தைவிட அதிகளவில் வாகனங்கள் சென்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பண்ருட்டி, திருவதிகையில் உள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை 17 திருமணங்கள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →