கடலூர்

மளிகைக் கடையில் ரூ.7,500 திருட்டு

Syndication

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் செவ்வாய்க்கிழமை இரவு மளிகைக் கடையின் ஓட்டை திறந்து உள்ளே புகுந்து ரூ.7,500-ஐ திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகில் மளிகைக் கடை நடத்தி வருபவா் மகாராஜன் (62). வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ள இவா், செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் மேல் சிமென்ட் ஓடு திறந்து கிடந்தது.

மகாராஜன் கடைக்குள் சென்று பாா்த்தபோது, பணப்பெட்டியிலிருந்த ரூ.7,500 ரொக்கம் மற்றும் மளிகைப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் திருட்டு நடைபெற்ற கடையைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

ஆா்ப்பாட்டம் நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்

தமிழ் திறனறித் தோ்வு: மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்

டிச. 9, 10-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஐயப்ப பக்தா்: விரைந்து காப்பாற்றிய உதவி ஆய்வாளா்

SCROLL FOR NEXT