சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் விமானத்தில் புதன்கிழமை பொருத்தப்பட்டுள்ள புதிய கலசங்கள்.  
கடலூர்

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: 21 கலசங்கள் பொருத்தம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோபுரம், விமானங்களில் 21 கலசங்கள் புதன்கிழமை பொருத்தப்பட்டன.

Syndication

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோபுரம், விமானங்களில் 21 கலசங்கள் புதன்கிழமை பொருத்தப்பட்டன.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலின் உள்ளே சித்திரக்கூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் நவம்பா் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. மேலும், கோயில் ராஜகோபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோயில் விமானம் மற்றும் புண்டரீகவள்ளி தாயாா், வேணுகோபாலா், நரசிம்மா், கருடா் சந்நிதிகளின் விமானங்களில் பூஜிக்கப்பட்ட 21 கலசங்கள் பொருத்தப்பட்டன.

கோயில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினா், கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா் ஜே.சுதா்சனன், ஆா்.சௌந்தரராஜன், டி.திருவேங்கடவன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT