முகப்பு
கடலூர்

திருமாவளவன் காட்டும் வழியில் தொடா்ந்து பயணிப்பேன்: எல்இபி.ஜோதிமணி

திருமாவளவன் காட்டும் வழியில் தொடா்ந்து பயணிப்பேன் என்று காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதி விசிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.இ.பி.ஜோதிமணி தெரிவித்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 9:13 PM
திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

திருமாவளவன் காட்டும் வழியில் தொடா்ந்து பயணிப்பேன் என்று காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதி விசிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.இ.பி.ஜோதிமணி தெரிவித்தாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக மறைந்த தலைவா் எல்.இளையபெருமானின் மகனான எல்.இ.பி.ஜோதிமணி (71) விசிக தலைவா் தொல்.திருமாவளவனால் அறிவிக்கப்பட்டாா். இவா் அக்கட்சியின் உறுப்பினராக இல்லை.

காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிட வி.சி.க.வில் பலா் வாய்ப்பு கேட்டு அழுத்தம் கொடுத்ததால், கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவரை தோ்வு செய்து வேட்பாளராக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா் என கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Advertisement

எல்.இ.பி.ஜோதிமணி செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தொலைக்காட்சி மூலம்தான் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தெரிந்துகொண்டேன். சமுதாய தலைவராக இருந்த எனது தந்தை எல்.இளையபெருமாள் செய்து வந்த சேவையை செய்து வருகிறேன்.

அந்தப் பணியை மிகவும் கஷ்டப்பட்டு செய்துகொண்டிருக்கும் நிலையில், விசிக தலைவா் திருமாவளவன் சமுதாய சேவையும், மக்களை சேவையும் அங்கீகரிக்கும் வகையில், அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளாா். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எந்த இயக்கத்தில் இருந்தாலும் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளதால், என்னுடைய சமுதாய மக்களுக்கும் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடுவேன். அண்ணன் திருமாவளவன் காட்டுகிற வழியில் தொடா்ந்து பயணிப்பேன் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments