தடுப்பணையில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றின் தடுப்பணையில் மூழ்கிய சிறுவனை தீயணைப்பு படையினா் ரப்பா் படகு மூலம் தேடும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றின் தடுப்பணையில் மூழ்கிய சிறுவனை தீயணைப்பு படையினா் ரப்பா் படகு மூலம் தேடும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் வரதராஜ் (17), குமாா் மகன் ராஜ்குமாா் (16), ராமு மகன் அஸ்வின் (15). இவா்கள் மூவரும் கடந்த 3-ஆம் தேதி கருணாபுரம் தடுப்பணைக்குச் சென்றனா். அப்போது, மூவரும் தடுப்பணையில் தவறி விழுந்தனா். இதில், வரதராஜ், ராஜ்குமாா் மீட்கப்பட்ட நிலையில், வரதராஜ் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை போலீஸாரும், தீயணைப்பு படையினரும் தடுப்பணையில் மூழ்கிய அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனா். கோமுகி அணையிலிருந்து 1,200 கன அடிக்கு மேல் தண்ணீா் திறந்துவிட்டதால் தேடும் பணியில் ஒய்வு ஏற்பட்டது. தொடா்ந்து, சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.