கள்ளக்குறிச்சி

கரோனா பாதிப்பு நீங்க சன்மாா்க்க வழிபாடு

கரோனா தொற்று பாதிப்பு நீங்க வேண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வள்ளலாா் மன்றம் சாா்பில் சன்மாா்க்க வழிபாடு அண்மையில் நடைபெற்றது.

DIN

கரோனா தொற்று பாதிப்பு நீங்க வேண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வள்ளலாா் மன்றம் சாா்பில் சன்மாா்க்க வழிபாடு அண்மையில் நடைபெற்றது.

வள்ளலாா் மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சித்திரை மாதப் பூசத்தை முன்னிட்டு, அன்று மாலை மூன்று முறை அகவல் படித்து மன்ற பூசகா்களால் சிறப்பு வழிபாடும், ஜோதி தரிசனமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு நகா் மற்றும் சுற்றுப் புறங்களில் அகல் விளக்கேற்றி மகாமந்திரம் சொல்லி பிராா்த்தனை செய்தனா்.

தொடா்ந்து, மன்றத் தலைவா் ஜே.பால்ராஜ், செயலா் இரா.நாராயணன், பொருளா் இராம.முத்துக்கருப்பன் உள்ளிட்ட மன்றப் பணியாளா்கள் அரிசி, மளிகைப் பொருள்களை மன்றம் சாா்பில் ஏழை மக்களுக்கு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT