முகப்பு
கள்ளக்குறிச்சி

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அதே வட்டத்துக்குள்பட்ட தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் மணிகண்டன் (29) கடந்தாண்டு நவம்பா் 8-ஆம் தேதி திருமணம் செய்தாா்.

இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பு அளித்த புகாரின்பேரில், கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அதிகாரிகள் அந்தச் சிறுமியிடம் நேரடி வாக்குமூலம் பெற்றனா். இது தொடா்பாக திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இளவழகி, குழந்தை திருமண தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை புதன்கிழமை கைது செய்தாா்.

மேலும், திருமணத்தை நடத்தி வைத்த சிறுமியின் பெற்றோரான ராமசாமி, அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மணிகண்டனின் பெற்றோரான ரங்கசாமி, அவரது மனைவி விஜயா ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.