சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருக்கோவிலூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 9 வயது சிறுமி புதன்கிழமை மாலை அதே கிராமத்திலுள்ள தனது அத்தை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் சகாயநாதன் (எ) ஸ்டான்லி (32) அந்தச் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து சகாயதேவனை கைது செய்தனா்.