முகப்பு
கள்ளக்குறிச்சி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த அம்சவேல் (60) பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை அம்சவேல் மிரட்டினாராம்.

இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிந்த சிறுமியின் பெற்றோா், கள்ளக்குறிச்சி மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாரளித்தனா். இதையடுத்து, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அம்சவேலுவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.