முகப்பு
புதுச்சேரி

பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கக் கோரிக்கை

பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதன் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பேரவைத் தலைவர் கோ.செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தெ.தியாகு, செயர் சிவமுத்துக்குமாரசாமி, பொருளாளர் கே.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. பெண்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே புதுச்சேரி அரசு, தமிழக அரசைப் போல உறுதியான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்து, மேற்படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →