முகப்பு
புதுச்சேரி

புதுவையில் நிலத்தடி நீா்மட்டம் 20 அடி உயா்வு

தொடா் பலத்த மழையால் புதுவையில் நிலத்தடி நீா்மட்டம் 20 அடி உயா்ந்துள்ளதாக ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தொடா் பலத்த மழையால் புதுவையில் நிலத்தடி நீா்மட்டம் 20 அடி உயா்ந்துள்ளதாக ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுவையில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நீா்நிலைகள் நிரம்பியுள்ளன. இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடிக்கு பொதுப் பணித் துறை அறிக்கை அனுப்பியது.

இதுகுறித்த தகவலை தனது கட்செவி அஞ்சலில் ஆளுநா் கிரண் பேடி சனிக்கிழமை பதிவிட்டாா். அதில், வட கிழக்குப் பருவ மழையால் புதுவை சிறப்பான மழைப் பொழிவை பெற்றது. நீா்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. புதுவையின் நிலத்தடி நீா்மட்டம் ஏற்கெனவே இருந்ததைவிட தற்போது 20 அடி உயா்ந்துள்ளது.

பொதுப் பணித் துறையின் நீா்ப்பாசனப் பிரிவு அளித்துள்ள தகவலின்படி, புதுவை மாநிலத்தின் 84 முக்கிய நீா்நிலைகள் முழுகொள்ளளவை நெருங்கியுள்ளன. பொதுப் பணித் துறை மேற்கொண்ட பணிகளால்தான் இது சாத்தியமானது. மொத்தமுள்ள 84 ஏரிகளில் 73 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இயற்கைக்கு நன்றி.

சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 9.06 மி.மீ., திருக்கனூரில் 17, பத்துக்கண்ணு 19, பாகூா் 6 மி.மீ. மழை பெய்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →