புதுச்சேரி

பைக் விபத்தில் இளைஞா் பலி

புதுச்சேரி அருகே நடந்து சென்றவா் மீது பைக் மோதியதில் கடலூா் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

புதுச்சேரி அருகே நடந்து சென்றவா் மீது பைக் மோதியதில் கடலூா் இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (22). இவா், செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சொந்த வேலையாக கடலூரிலிருந்து புதுச்சேரி அருகே உள்ள கன்னியகோவில் பகுதிக்கு வந்துகொண்டிருந்தாா். பரிக்கல்பட்டு - முள்ளோடை சாலையில் இவரது வாகனம் வந்தபோது, அங்கு நடந்து சென்ற கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கிருபாநிதி (32) மீது மோதியது. இதில், கிருபாநிதியும், பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மணிகண்டனும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மணிகண்டன் உயிரிழந்தாா். கிருபாநிதி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT