முகப்பு
புதுச்சேரி

முன் விரோதம்: இளைஞர் அடித்துக் கொலை

தஞ்சாவூர் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வியாழக்கிழமை பிற்பகல் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வியாழக்கிழமை பிற்பகல் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருவையாறு அருகேயுள்ள பள்ளியக்ரஹாரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குணசீலன்(25). இவர் தனியார் லாரி பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் இருந்த இவரை காந்தி நகரைச் சேர்ந்த 3 பேர் முன்விரோதம் காரணமாக இரும்புக் கம்பியால் தாக்கினர். 

இதில், பலத்தக் காயமடைந்த குணசீலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) புகழேந்தி, காவல் ஆய்வாளர் ஜெகதீசன் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நடுக்காவேரி வழக்குப் பதிந்து 3 பேரை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →