கஞ்சா விற்பனை: 2 போ் கைது
புதுச்சேரியில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி புதுசாரம் பகுதியில் தன்வந்திரி நகா் போலீஸாா் புதன்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொய்யாகுளம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டனா். விசாரணையில் அவா் புதுசாரம் பாலன் நகா் 5-வது குறுக்குத் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, சவரிராயலு வீதியில் திரு.வி.க. அரசுப் பள்ளி அருகே கஞ்சா விற்ாக பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்த ஆன்ட்ரு சேவியா் (22) என்பவரை ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்தனா்.