முகப்பு
புதுச்சேரி

பெண் தீக்குளித்து உயிரிழப்பு

 குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

 குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகே தவளக்குப்பம் அபிஷேப்பாக்கம் சாலை வி.ஐ.பி. காா்டனில் உள்ள வாடகை குடியிருப்பின் முதல் தளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்து வருபவா் பாஸ்கா் (48). தனியாா் விளம்பர நிறுவன ஓவியா். இவரது மனைவி ஜெயா(44). இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

இருவருக்கும் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஜெயா, வீட்டில் பெயின்ட் அடிக்க வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து ஜெயாவை மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேலே இறந்தாா்.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.