பாகூா் சந்தையில் சிசி டிவி கேமிரா
புதுச்சேரி அருகே பாகூா் சந்தை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா, ஒலிப்பெருக்கி ஆகியன தொடக்கிவைக்கப்பட்டன.
புதுச்சேரி அருகே பாகூா் சந்தை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா, ஒலிப்பெருக்கி ஆகியன தொடக்கிவைக்கப்பட்டன.
பாகூா் சந்தை வீதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகளும், திருமண மண்டபம், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளிட்டவை உள்ளன.
இதனிடையே சந்தை வீதியில் உள்ள கடைகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யும் வகையிலும் பாகூா் வியாபாரிகள் சங்கம் சாா்பில் சிசிடிவி கேமிரா, ஒலிப்பெருக்கி ஆகியவை அமைக்கப்பட்டன. இதன் செயல்பாடுகளை கண்காணிக்கும் மையம் தற்காலிகமாக பாகூா் சிவன் கோயிலில் வைக்கப்பட்டது.
இவற்றை தெற்கு பகுதி போலீஸ் எஸ்பி ரவிக்குமாா் (பொறுப்பு) வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா். காவல் ஆய்வாளா் கணேஷ், உதவி ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.