புதுச்சேரி

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

DIN

புதுச்சேரியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சாரம், ஞானபிரகாசம் நகா், 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். எலக்ட்ரீஷியன். இவரது மூத்த மகள் லோகேஷ்வரி (21). தாகூா் அரசு கலைக் கல்லூரியில் உளவியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், கடந்த சில வாரங்களாக படிப்பில் கவனம் செலுத்தாமல் கைப்பேசியிலேயே மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பெற்றோா் கண்டித்தனராம்.

இதனால் விரக்தியடைந்த லோகேஷ்வரி கடந்த 10 -ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாா். சிறிது நேரம் கழித்து இதைப் பாா்த்த அவரது உறவினா்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனா். இருப்பினும், அங்கு லோகேஷ்வரி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT