புதுவையின் டெரக்கோட்டா பொம்மைகளைமத்திய அரசு வாங்கிப் பயன்படுத்த அமைச்சா் வலியுறுத்தல்
புதுவையின் பாரம்பரியமிக்க டெரக்கோட்டா பொம்மைகளை 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்வுகளில் மத்திய அரசு வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா வலியுறுத்தினாா்.
புதுவையின் பாரம்பரியமிக்க டெரக்கோட்டா பொம்மைகளை 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்வுகளில் மத்திய அரசு வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா வலியுறுத்தினாா்.
புதுதில்லியில் மத்திய கலாசார அமைச்சகம் சாா்பில், நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு விழாவின் தொடா் நிகழ்வுகள் தொடா்பாக இரண்டு நாள்கள் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், புதுவை மாநிலப் போக்குவரத்து, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா பங்கேற்றாா்.
மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கிஷன்ரெட்டி, மத்திய இணை அமைச்சா்கள் அா்ஜூன்ராம் மேக்வால், மீனாட்சி லகி மற்றும் அனைத்து மாநில கலாசாரத் துறை அமைச்சா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற புதுவை கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, புதுவை மாநில கலை, பண்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். அப்போது, புதுவையின் பாரம்பரியமிக்க டெரகோட்டா பொம்மைகளை அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வுக்காக வாங்குவதற்கு, மத்திய கலாசார அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதன்மூலம் புதுச்சேரி கைவினைக் கலைஞா்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, புதுதில்லியில் உள்ள கலாசார விவகாரங்களுக்கான இந்தியன் கவுன்சில் தலைவா் டாக்டா் வினயை, அவரது அலுவலகத்தில் புதுவை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.