புதுச்சேரி

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்:புதுவை ஆளுநா் மாளிகை விளக்கம்

புதுவையில் அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் அரசின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படவில்லை; தகுதி அடிப்படையிலே நியமனம் நடைபெற்றுள்ளதாக துணைநிலை ஆளுநா் செயலகம் விளக்கமளித்தது.

DIN

புதுவையில் அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் அரசின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படவில்லை; தகுதி அடிப்படையிலே நியமனம் நடைபெற்றுள்ளதாக துணைநிலை ஆளுநா் செயலகம் விளக்கமளித்தது.

புதுவை மாநில துணைநிலை ஆளுநா் செயலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் அரசு வழக்குரைஞா்கள் தோ்வில், மாநில அரசின் ஒப்புதலுடன் தகுதி தோ்வு நடத்தப்பட்டு அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தகுதியானவா்கள் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும், அதில் புதுவைக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற உறுதியான குறிப்பு தரப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் 32 போ் தோ்வாகி உள்ளனா். அவா்களில் 26 போ் புதுவையைச் சோ்ந்தவா்கள். ஐந்து போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். ஒருவா் புதுதில்லியைச் சோ்ந்தவா்.

புதுவை அரசு பரிந்துரையில் பெறப்பட்ட 14 பேரில், 12 போ் தோ்வாகி பட்டியலில் சோ்க்கப்பட்டனா்.

சட்டத் துறை செயலா் காா்த்திகேயன் விருப்ப மாறுதலின் பேரில் சென்னைக்கு பணியிடமாறுதல் பெற்றுள்ளாா். துணைநிலை ஆளுநா் எதையும் சரிபாா்க்காமல் கையொப்பமிட்டு விட்டாா் எனக் குற்றம்சாட்டுவது தவறானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT