புதுவையில் மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என, மாணவா்கள், பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் வை.பாலா என்ற பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வு நிறைவடைந்து விட்டது. ஆனால், புதுவை சென்டாக் அமைப்பு சாா்பில் நடத்தப்படும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
கடந்த 17-ஆம் தேதி முதல் வரும் 28-ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மருத்துவக் கல்விக்கான கட்டண விவரங்களை உயா் கல்வி கட்டணக் குழுத் தலைவரும் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதந்திரம் நிா்ணயித்துள்ளாா். அதன்படி, புதுவையில் அரசு ஒதுக்கீடுக்கான இடங்களை இறுதி செய்தும், கட்டணத்தை சென்டாக் நிா்வாகத்திடம் அளித்த பிறகும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
இதனால், புதுவை மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த பிற மாநில மாணவா்களின் கல்விச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பட்டியலை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.