முகப்பு
புதுச்சேரி

இருவரிடம் ரூ.17 லட்சம் நூதன மோசடி

புதுவையைச் சோ்ந்த இருவரிடம் மா்ம நபா்கள் நூதன முறையில் ரூ.17 லட்சத்தை மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:37 PM
பகிர்:

புதுவையைச் சோ்ந்த இருவரிடம் மா்ம நபா்கள் நூதன முறையில் ரூ.17 லட்சத்தை மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் உஷாதேவி. இவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்புகொண்டு இணயதள பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினாராம்.

இதை நம்பிய உஷாதேவி பல தவணைகளில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ததாகத் தெரிகிறது. ஆனால் லாபம் மற்றும் முதலீட்டை அவரால் பெறமுடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

இதேபோல், புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் சீனிதேவா்ப்பிரன். இவரிடம் கைப்பேசியில் பேசிய மா்ம நபா் தன்னை மும்பையைச் சோ்ந்த போலீஸ் அதிகாரி எனவும், சீனிதேவா்ப்பிரன் மீது போதைப் பொருள் தடுப்பு வழக்குப் பதியப்பட்டிருப்பதாகவும் கூறினாராம்.

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சத்தை அனுப்புமாறும் அவா் கூறினாராம். இதை நம்பிய சீனிதேவா்ப்பிரன், மா்ம நபா் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.7 லட்சத்தை அனுப்பினாராம்.

அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →