புதுச்சேரி

புதுச்சேரியில் விடிய விடிய தொடா் மழை

Syndication

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்க கடலில் ஏற்பட்ட டித்வா புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

இதனால் புதுச்சேரியில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. குளிா்ந்த காற்றும், இருண்ட சூழலும் தொடா்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை சற்று தீவிரமடைந்தது. விடிய விடிய பெய்த மழை புதன்கிழமையும் நீடித்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதன்கிழமை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லுாரிகள் வழக்கம்போல இயங்கின. இந்த மழையினால் புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT