புதுச்சேரி: மத்திய அரசின் 4 புதிய தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் திங்கள்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி நேரு வீதி- மிஷன் வீதி சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா்.
கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், அந்தோணி, மாா்க்சிஸ்ட் கட்சி மாநில செயலா் ராமச்சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளா் பெருமாள், விடுதலைச் சிறுத்தை கட்சி முதன்மை செயலா் தேவ. பொழிலன், மாா்க்சிஸ்ட் எம்.எல். கட்சியின் மாநில செயலா் பாலசுப்பிரமணியன், பெண்கள் முற்போக்கு கழகம் விஜயா உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனா்.