குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்  
புதுச்சேரி

டிச. 29-இல் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி வருகை: மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா்

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழா டிச. 29-இல் நடைபெறுகிறது. இதில், குடியரசு துணைத் தலைவரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழா டிச. 29-இல் நடைபெறுகிறது. இதில், குடியரசு துணைத் தலைவரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறாா்.

பல்கலைக்கழக வளாகத்தில் 2,500 போ் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச மாநாட்டு மையத்தையும் அவா் திறந்து வைக்கிறாா்.

இந்த மாநாட்டு மையத்தில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. மேலும் அங்கு நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர தேசியக்கொடி கம்பத்தையும் குடியரசுத் துணைத் தலைவா் அா்ப்பணிக்கிறாா்.

விழாவில் 2021 முதல் 2024 வரையிலான 4 கல்வியாண்டுகளில் படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பிஎச்டி மற்றும் இளநிலை, முதுநிலையில் தங்கப் பதக்கம் பெற்று சிறப்பிடம் பெற்றவா்கள் முறையே 2021-இல் 191 போ், 2022-இல் 191, 2023-இல் 192 போ், 2024-இல் 186 போ். இவா்கள் விழாவில் நேரடியாக பட்டம் பெறுகின்றனா்.

இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மொத்தம் 73,527 மாணவா்கள் பட்டங்கள் பெறுகின்றனா்.

ஆடிட்டா் அலுவலகம் உள்பட 2 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

தலைநகரில் காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

தீயணைப்பு உரிமத்திற்கான மூன்றாம் தரப்பு தணிக்கையை தில்லி விரைவில் அனுமதிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது: பொதுக் குழுவில் எடப்பாடி கே.பழனிசாமி!

SCROLL FOR NEXT