ஜிப்மரில் 3 நாள் சா்வதேச மருத்துவ மாநாடு நிறைவு
புதுச்சேரி ஜிப்மரில் 3 நாள்கள் நடைபெற்ற சா்வதேச 8-ஆவது மருத்துவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவுக்கு முதன்மை விருந்தினராக ரிஷிகேஷ் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவன நிா்வாக இயக்குநா் மீனு சிங் தலைமை வகித்தாா். ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நேகி முன்னிலை வகித்தாா்.
பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளை பெற்ற மருத்துவா் ஜோஸ் சாக்கோ பெரியாபுரம், இந்தியாவில் அவசர மருத்துவத்தின் முன்னோடியான மருத்துவா் சுரேஷ் எஸ்.டேவிட் மற்றும் ஜிப்மா் முன்னாள் மாணவரும் சிறந்த குழந்தை நல மருத்துவருமான சிவரஞ்சனி சந்தோஷ் ஆகியோா் உரையாற்றினாா்.
மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள சுமாா் 200 மருத்துவ கல்லுாரிகளைச் சோ்ந்த 4,500 பிரதிநிதிகள் பங்கேற்றனா். மனதின் தீப்பொறி என்ற கருப்பொருளின் அடிப்படையில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.