முகப்பு
விழுப்புரம்

விஜயகாந்த் பூரண நலம் பெற தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமடைந்து திரும்ப வேண்டி, செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் தேமுதிகவினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:22 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமடைந்து திரும்ப வேண்டி, செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் தேமுதிகவினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.
 முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அர்ச்சனை, பிரார்த்தனை நடைபெற்றது.
 இதில், மாவட்டப் பொருளர் இல.தயாநிதி, ஒன்றியச் செயலர் ஜி.பாபு, செஞ்சி நகரச் செயலர் பி.பழனி, அவைத்தலைவர் எம்.அருள்முருகன், அனந்தபுரம் நகரச் செயலர் ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி இருதயமேரி, நிர்வாகிகள் சாரங்கபாணி, பிரபாகரன், செந்தில்குமார், அரங்கநாதன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.