அனைத்து வியாபாரிகள் சங்கக் கூட்டம்
சங்கராபுரத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்க முன்னாள் தலைவர் சி.சீனுவாசன் தலைமை வகித்தார். வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத் தலைவராக ஆர்.பிரகாசம், செயலராக கோ.குசேலன், பொருளாளராக எம்.ராஜேந்திரன், துணைத் தலைவராக எஸ்.செல்வம், துணைச் செயலராக எம்.நெடுஞ்செழியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கராபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு, காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தையும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தையும் புதிதாக நிறுவி செயல்படுத்த வேண்டும்.
சங்கராபுரத்தில் பெரும்பாலான வீதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு ஏதுவாக லாரி வாங்க பேரூராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் முன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க முன்னாள் செயலர் ஆர்.சாதிக்பாட்ஷா நன்றி கூறினார்.