விவசாயிகள் மகா சபை நிர்வாகிகள் கூட்டம்
உளுந்தூர்பேட்டையில் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் கே.வீரன் தலைமை வகித்தார்.
உளுந்தூர்பேட்டையில் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் கே.வீரன் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஜ எம்எல்) மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஒன்றிய நிர்வாகிகள் பி.ராதாகிருஷ்ணன், ஜி.ஆறுமுகம், சி.கலாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க மறுக்கும் மத்திய - மாநில அரசுகளை ஆட்சியிலிருந்து அகற்றுதல், மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வாருதல், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.