முகப்பு
விழுப்புரம்

மக்கள் நீதி மய்யம்: பொறுப்பாளர் பதவிகளுக்கு விருப்ப மனு

விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நியமனத்துக்கு விருப்ப மனுக்கள் ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டன.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:40 AM
பகிர்:

விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நியமனத்துக்கு விருப்ப மனுக்கள் ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டன.
 விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமை வகித்தார்.
 தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைப் பொறுப்பாளர் நிஸ்தர்கான் வரவேற்றார்.
 கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதி அளவிலும், நகர, ஒன்றிய, கிளைகள் அளவிலும் நிர்வாகிகளை நியமிப்பதற்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
 இதில், கட்சி உறுப்பினர்கள், ரசிகர் மன்றத்தினர் ஏராளமானோர் பங்கேற்று விருப்பமனு அளித்தனர்.
 நகர மன்ற நிர்வாகிகள் செல்வராஜ், கமல்தாஸ், அஸ்கர் அலி, சரவணன், பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் லட்சுமிபதி நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.