விழுப்புரம்

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கஞ்சிக் கலய ஊர்வலம்

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை பெத்தான் குளக்கரையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வ

DIN

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை பெத்தான் குளக்கரையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், ஆடிப்பூர கஞ்சிக் கலய விழா, பங்காரு அடிகளாரின் 79-ஆவது பிறந்த நாள் விழா,  வழிபாட்டு மன்ற ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு கொடியேற்றம், 7 மணிக்கு சிறப்பு அர்ச்சனை, காலை 11 மணிக்கு அன்னை ஆதிபராசக்தி, பங்காரு அடிகளார் உருவப் படங்களுடன் கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சிக் கலயம், தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். 
முன்னதாக, ஊர்வலத்தை செஞ்சி எம்எல்ஏ. மஸ்தான் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். ஊர்வலம்  அங்காடி வீதி வழியாக வந்து, வழிபாட்டு மன்றத்தை அடைந்தது.  அனைவருக்கும் கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர், விழுப்புரம் மாவட்ட தலைமை மன்றத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT