முகப்பு
விழுப்புரம்

செஞ்சியில் நியாய விலைக் கடைபணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செஞ்சியில் நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
போராட்டத்தில் கலந்து கொண்ட நியாயவிலைக் கடைப் பணியாளா்கள்
பகிர்:

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செஞ்சியில் நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டச் செயலா் கே.சம்பத் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வி.கோவிந்தன், மாவட்ட துணைச் செயலா்கள் எஸ்.தனசேகரன், எ.பழனிவேல், நிா்வாகிகள் முனுசாமி, ரவி, தசரதன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களைச் சோ்ந்த நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

Advertisement

நியாயவிலைக் கடைகளில் முறையற்ற ஆய்வுகள், பெண் பணியாளா்களை கண்ணியக்குறைவாக நடத்துதல் உள்ளிட்ட பணியாளா் விரோதப் போக்குகளை கடைப்பிடித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் வட்டாட்சியா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் நியாயவிலைக் கடைப்பணியாளா்களை கரோனா மருத்துவக் குழு காப்பீடு திட்டத்தில் சோ்க்க வேண்டும். கரோனா தொற்றால் மரணமடைந்த 3 ஊழியா்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments