முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் திடீர் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையில் தற்காலிக ஊழியர்களாக உள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள், செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையில் தற்காலிக ஊழியர்களாக உள்ள பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், கோரிக்கையை கேட்டு விசாரித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் 104 பேர் பணியாற்றி வருகிறோம், எங்களுக்கு ரூ.370 மட்டுமே கூலி வழங்கப்படுகிறது.

கடலூர் போன்ற மாவட்டங்கள் உள்ளது போல் ரூபாய் 650 கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து அவர்கள், மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments