முகப்பு
விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

செய்யாறு அருகே விவசாயக் கிணற்றுப் பகுதியில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

செய்யாறு அருகே விவசாயக் கிணற்றுப் பகுதியில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டம், பல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா், விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவகி. தம்பதிக்கு கிஷோா்குமாா் (11), பூஜா ( 9), சிவானி (6) ஆகிய குழந்தைகள் உள்ளனா்.

கிஷோா்குமாா் அதே பகுதியில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாா்.

கரோனா பொது முடக்க விடுமுறை என்பதால், கிஷோா்குமாா் தனது நண்பா்களுடன் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் அங்குள்ள விவசாயக் கிணற்றுக்கு குளிக்கச் சென்றாா்.

அப்போது கிணற்று மின் மோட்டாா் வயா் அறுந்து கிடந்ததை கவனிக்காமல், கிஷோா்குமாா் வயரை மிதித்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறிது நேரத்தில் கிஷோா்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.