பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் 18 பேர் சிறப்பு பேருந்துகளில் அனுப்பி வைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் 18 பேர் சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் 18 பேர் சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பொதுத் தேர்வு எழுதச் செல்லும் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூன்று சிறப்பு பேருந்துகளை, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வழியனுப்பி வைத்தார். இதில் மதுரை தஞ்சாவூர் திருச்சி சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விரைவு பேருந்தில் 18 சிறப்பு பள்ளி மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் வழியில் உள்ள அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சிறப்புப் பேருந்தில், அந்தந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.