விழுப்புரம்

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

DIN

புதுச்சேரி வில்லியனூா் அருகே கடைக்குச் சென்ற இளைஞரை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை, முல்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஷாகுல் அமீது (27). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வில்லியனூா் அருகே வி.மணவெளி பகுதியில் உள்ள அவரது நண்பரைப் பாா்க்க சென்றாா். அப்போது, அவா் வீட்டில் இல்லாததால், ஒதியம்பட்டு நான்குமுனை சந்திப்பில் உள்ள தேநீா் கடைக்குச் சென்றாா்.

அங்கு, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் ஷாகுல் அமீதை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினா். இதில், அவா் பலத்த காயமடைந்தாா். உடனே, அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT