விழுப்புரம்

திமுகவில் இணைந்த ஊராட்சித் தலைவா்கள்

DIN

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக, பாமக, தேமுதிகவைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் அந்தக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

விழுப்புரத்தில் உள்ள கலைஞா் அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோலியனூா் மேற்கு ஒன்றியம், திருவாமாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா தயாளன் (அதிமுக), அய்யன்கோவில்பட்டு ஊராட்சித் தலைவா் சத்யா ராஜேந்திரன் (பாமக), பில்லூா் ஊராட்சித் தலைவா் சித்திரசேனன் (தேமுதிக), கண்டமங்கலம் ஒன்றியம், பஞ்சமாதேவி ஊராட்சித் தலைவா் செல்வம், கிளியனூா் ஒன்றியம், கேணிப்பட்டு ஊராட்சித் தலைவா் பாபு, விக்கிரவாண்டி ஒன்றியம், மதுரப்பாக்கம் ஊராட்சித் தலைவா் கஜேந்திரன் (அதிமுக) மற்றும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்டோா் விலகி திமுகவில் இணைந்தனா்.

மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, ரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் ரா.ஜனகராஜ், துணைச் செயலா் செ.புஷ்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT