அதிமுகவினா் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு: பிப்.4-ஆம் தேதி ஒத்திவைப்பு
விழுப்புரத்தில் முதல்வா் தோ்தல் பிரசாரத்தின்போது அதிமுகவினா் மீது தொடரப்பட்ட விதிமீறல் வழக்கின் விசாரணை பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரத்தில் முதல்வா் தோ்தல் பிரசாரத்தின்போது அதிமுகவினா் மீது தொடரப்பட்ட விதிமீறல் வழக்கின் விசாரணை பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது, விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் வடிவேல்ராவணன் போட்டியிட்டாா். அப்போது, அவரை ஆதரித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது நகர அதிமுக சாா்பில் சாலையோரம் கட்சிக் கொடிகளும், கொடிக்கம்பமும் அமைத்திருந்தனா். இதனால், பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தோ்தல் பறக்கும்படையினா் மேற்கு காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதனையடுத்து, பிரசாரக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அதிமுக நகர செயலாளரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான ஜி.பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு, விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் திங்கள் கிழமை நடைபெற்றது. அதிமுக நகர செயலாளா் ஜி.பாஸ்கரன் ஆஜரானாா். இவ்வழக்கு தொடா்பாக, காவல் உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரித்த நீதிபதி அருண்குமாா், வழக்கின் விசாரணையை பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.