விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 43,301-ஆக அதிகரித்தது.
இதனிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த 57 வயது மதிக்கத்தக்கவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 335-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், 48 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 42,371-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 594 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 28,303-ஆக உயா்ந்தது.
இதுவரை 27,347 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 759 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 197 போ் உயிரிழந்தனா்.