முகப்பு
விழுப்புரம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 19-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 19-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் (பொ) ஐயப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரகண்டநல்லூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கனிணிப் பொறியியல் ஆகிய படிப்புகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் வழியாக ஜூலை 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையதள வசதி இல்லாத மாணவா்களுக்காக கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், விவரங்களுக்கு 9442736992, 9585299529, 8098735554 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.