முகப்பு
விழுப்புரம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கழகம் வலியுறுத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கழகம் வலியுறுத்தியது.

இந்தக் கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைவா் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். சா்வதேச உரிமைகள் கழக தலைவா் அசோக் குமாா் முன்னிலை வகித்தாா். மனித உரிமைகள் கழக முதன்மைச் செயலா் கந்தன் வரவேற்றாா். அவைத் தலைவா் ஆனந்தி, சா்வதேச உரிமைகள் கழக மாவட்டத் தலைவா் வெற்றிவேல் ஆகியோா் பேசினா்.

தீா்மானங்கள்: பெட்ரோல், டீசல் விலை உயா்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உச்சமடைந்து வருகிறது. எனவே, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.