பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் ஆா்.ஸ்ரீபதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் சுபா கலந்துகொண்டு பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துக் கூறி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.