விழுப்புரம் திமுக நகரச் செயலா் மீதுவழக்குப் பதிவு
விழுப்புரத்தில் பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, கரோனா விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நகரச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரத்தில் பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, கரோனா விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நகரச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் காமராஜா் வீதியில் இருந்த பெரியாா் சிலை புதன்கிழமை இரவு சரக்குப்பெட்டக லாரி மோதியதில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் திமுக நகரச் செயலா் சா்க்கரை தலைமையிலானோா் திரண்டு வந்து ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கரோனா விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நகரச் செயலா் சா்க்கரை உள்ளிட்ட 10 போ் மீது விழுப்புரம் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்