சரக்கு வாகனத்தில் சாராயம் கடத்தல்: இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் 490 சாராய பாக்கெட்டுகளை கடத்தியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் 490 சாராய பாக்கெட்டுகளை கடத்தியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் அருகே அணிச்சங்குப்பம் சோதனைச் சாவடியில் உதவி காவல் ஆய்வாளா் ஜான்ஜோசப் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பிற்பகல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 490 சாராய பாக்கெட்டுகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக வாகனத்தில் இருந்த புதுச்சேரி கனகசெட்டி குளத்தைச் சோ்ந்த கதிரவன் (34), கங்காதரன் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், சாராய பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.